Saturday, June 3, 2017

எலே ராசா, இதைப் படி, வயிறெரிஞ்சு போ

இந்திய ஒற்றுமையை நிஜமாகவே  சீர்குலைக்கும் வகையில் அன்றாடம் வெறிக்கூச்சலிட்டு, விஷத்தை பரப்பி  வரும் உண்மையான தேச விரோதி  எச்.ராசாவிற்கு இச்செய்தி சமர்ப்பணம்.

நீ எல்லாம் தலைகீழா நின்னாலும் இந்த ஒற்றுமையை குலைக்க முடியாது. அதனால் அரசியலை விட்டுவிட்டு சீட் பண்ட் தொழிலுக்கே போயிடு.



 இதுவும் கேரள புதுமை
 
விஷ்ணு கோவிலில் இப்தார்
 
மலப்புரம், ஜூன் 2 -

கேரள மாநிலம் மலப்புரத்தில் லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோயில் உள்ளது.இங்கு இஸ்லாமியர்களின் புனித மாதமானரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் சுமார் 400 இஸ்லாமியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இதர மதத்தின ரும் உற்சாகமாக கலந்துகொண்டுள்ளனர்.

மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாக நடந்த இந்நிகழ்ச்சி குறித்து கூறியுள்ள கோயில் நிர்வாகமானது, “நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது, மனிதநேயத்திற்குத் தான்; மதத்திற்கு அல்ல! அவரவர் மதத்தை அவரவர் பின் பற்றுகிறார்கள்; ஆனாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான்” என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வெட்டிச்சிரா பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தற்போது கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சுமார் 300 இஸ்லாமிய குடும்பங்கள் நிதியுதவி அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இங்கே ஒரு மத வெறி பிடித்த நாய் குரைத்ததை அகற்றியுள்ளேன்.

    ReplyDelete
  3. ஐயா, இந்த பதிவில் நீங்க குறிப்பிட்ட இந்த விஷயம் பற்றி நண்பர்கள் சிலர் எனக்கு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாக நடந்தது என்பதை எவருமே மறுக்க முடியாது. இந்த விருந்தில் கலந்து கொண்ட மத நல்லிணக்க நோக்கம் கொண்ட இஸ்லாமியர்களை, இதர மக்களுடன் இணக்கமாக இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பும் நல்லிணக்க நோக்கம் கொண்ட இஸ்லாமிய மக்களை, இஸ்லாமிய மத துரோகிகள் என்று சீமான் பாணியில் தாக்கியிருக்கிறார்கள் மதவெறி பிடித்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக கண்டனத்துக்குரியது. மத அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்களால்தான் மத நல்லிணக்கத்திற்கே கேடு

      Delete