Thursday, June 1, 2017

மயிலுக்கு வந்த சோதனை




மயில்களுக்கு மட்டும் மனிதர்களுக்கு உள்ள பேசும் திறனும் சமூக வலைத்தளங்களை கையாளும் திறனும் இருந்தால் கோபத்தில் கொந்தளித்திருக்கும் அல்லது வேதனையில் நொந்து நூலாயிருக்கும். 

முக நூல் முழுக்க மயில்கள் இனப்பெருக்கம் செய்வது தொடர்பான புகைப்படங்களும் காணொளிக் காட்சிகளும்தான். 

பிள்ளையாருக்கு மோடி செய்த பிளாஸ்டிக் சர்ஜரி,
பிரம்மாஸ்திரம்தான் அணுகுண்டு,
புஷ்பக விமாணங்கள்,
வைகை அணையை மூட தெர்மகோல்

ஆகிய அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா மிஞ்சி விட்டார்.

ஆண் மயிலின் கண்ணீரிலிருந்தே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று சட்டப்புத்தகங்களை ஆராய்ந்து அவர் அரிய கண்டுபிடிப்பை அறிவிக்க, ஆண் மயிலும் மோடியைப் போல பிரம்மச்சாரி என்று தன் வாதத்திற்கு வலு சேர்க்க 

பாவம், அவரை எல்லோரும் சேர்ந்து கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள். இப்படி உதை வாங்குவதே காவிக்கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு வழக்கமாக போய் விட்டது. கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் முகத்தை துடைத்துக் கொண்டு போய் விடுவார்கள் என்பது வேறு கதை. 

இந்த மனிதனால் மயில்களின் அந்தரங்கப் படங்கள் (அதானே உண்மை) வெளியானதுதான் கொடுமை!

பின் குறிப்பு : ஒரு மாறுதலுக்காக பதினாரு வயதினிலே மயிலு படம்!

 

No comments:

Post a Comment