Wednesday, June 21, 2017

அடுத்து என்ன? போலி எண்கவுண்டரா?




பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பது வெறும் தந்திரமின்றி வேறொன்றுமில்லை என்றும்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதால்  அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் விமர்சிப்பவர்கள் மீது தலித் விரோதிகள் என்ற குற்றச்சாட்டு பாயும் என்று இரண்டு தினங்கள் முன்பு எழுதியிருந்தது நிஜமாகத் தொடங்கியுள்ளது.

அமித் ஷா வின் திருதராஷ்டிர ஆலிங்கனத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணசுவாமி அந்த வசையாடலை தொடங்கி விட்டார். அவர் புதிய தமிழகம் கட்சியை கலைத்து விட்டு விரைவில் பாஜகவிலேயே தன்னை கரைத்துக் கொண்டு விடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

"குஜராத் கோப்புக்கள்"  மூலம் மோடி, அமித் ஷா கூட்டணியின் பல அராஜகங்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராணா அயூப் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 

"என்னமோ பிரதீபா படீல்தான் மோசமான தேர்வு என்று சொன்னீர்களே" என்று ட்விட்டரில் அவர் தெரிவித்த கருத்துக்கு ஏராளமான வியாக்யானம் கொடுத்து புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது கொலைவெறியில் இருக்கும் சங்கிகள், அவரை போலி எண்கவுண்டர் செய்யாமல் இருக்க வேண்டும்....




இனி "தடா". "பொடா" என்ற பழைய சட்டங்களில் கைது செய்து உள்ளே தள்ளுவார்களோ?
 

No comments:

Post a Comment