Saturday, March 11, 2017

சந்திப்பு - தீர்ப்பு - சந்தேகம்




இது ஒரு சாமானியனின் சந்தேகம்

ஏ1 ஜெவை நிதியமைச்சர் ஜெய்ட்லி சந்திக்கிறார். குமாரசாமி தப்புக்கணக்கோடு ஒரு தீர்ப்பு அளிக்கிறார்.

பெப்சி தலைவர் இந்திரா நூயி ஜெய்ட்லியையும் மோடியையும் சந்திக்கிறார். தாமிரபரணி ஆற்றை பெப்சி, கோக் நிறுவனங்கள் சூறையாட தடையேதும் இல்லை என்று தீர்ப்பு வருகிறது.

சுசுகி நிறுவனத்தலைவர் மோடியைச் சந்திக்கிறார். சுசுகி நிறுவனத் தொழிற்சங்கத்தலைவர்கள் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் சொல்கிறது.

இந்த சந்திப்புக்களுக்கும் தீர்ப்புக்களுக்கும் என்னய்யா சம்பந்தம்?, அபத்தமாக சிந்திக்காதே என்றும் இது ஒரு ஆபாச சிந்தனை என்றும் சங்கிகள் பின்னூட்டம் எழுதலாம்.

ஆனால் ஏதோ இடிக்குதே என்று மனசாட்சியுள்ள இந்தியர்களுக்கு தோன்றும்.

இந்த சந்திப்புக்களுக்கும் தீர்ப்புக்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்பதை 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சிறு குழந்தை கூட நம்பாது.
 

No comments:

Post a Comment