Thursday, March 23, 2017

கா.கொ.கூ.க.வி.சு.சா.க.விளம்பரம்



காட்டிக் கொடுத்த கூட்டத்து கலப்பட வியாபாரி சுடிதார் சாமியாரின் கபட விளம்பரம்.


போலிச்சாமியாரும் புதிய கலப்பட வியாபாரியுமான ராம்தேவ், இன்று தனது பதஞ்சலி பொருட்களுக்காக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். 



பன்னாட்டுக் கம்பெனிகளை புறக்கணிக்க வேண்டும் என்பது சரிதான். இதை பன்னாட்டுக் கம்பெனிகளின் தரகரான மோடியின் மடியில் அமர்ந்து கொண்டு சொல்வதுதான் அயோக்கியத்தனம்.

பகத்சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் தனது பொருட்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்துவது என்பது கேவலமானது.

கோட்சேவின் பெயரையோ, சவர்க்காரின் பெயரையோ சொல்லி விற்க முடியாது என்று தெரிந்ததால் பகத்சிங்கின் பெயரை பயன்படுத்துகிறார்.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக போலியாக விளம்பரத்தில் முழங்கிய ராம்தேவால் இக்கருத்தை மோடியிடம் நேரடியாக முழங்க முடியுமா?

தூக்குக்கயிற்றை தைரியமாக சந்தித்த ஒரு வீரனின் பெயரை உச்சரிக்க, காவல்துறை கைது செய்து விடுமோ என்று பயந்து சுடிதார் அணிந்து தப்பித்த இந்த கோழைக்கு அருகதை உண்டோ?

போலிகள், போலிகள், போலிகள்.
காசுக்காக எதையும் செய்ய வெட்கப்படாத இழி பிறவிகள்.

1 comment:

  1. கொஞ்சம் பொறுங்க. கோட்சே என்ன. எட்டப்பன், யூதாஸ், தாவுத் இப்ராஹிம், மற்றும் பலர் நம்ம நாயகர்களா வருவாங்க பாருங்க.

    ReplyDelete