Tuesday, October 4, 2022

சுமந்தின் அற்பத்தனம்

 

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் (ஓய்வு) தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவை சுட்டு பகிர்கிறேன்.

நேற்று சன் டிவியில் வெற்றி மாறனின் கருத்தையொட்டி நடந்த விவாதத்தில் தோழர்கள் Subagunarajan V M S, Surya Xavier நடத்திய தாக்குதலில் திணறிய மருத்துவர் சுமந்த் ராமன் இத்தகைய விவாதங்களினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என ட்விட்டரில் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார். விவாதத் தலைப்புத் தெரிந்த பிறகும் பங்கேற்க ஒப்புக் கொண்டு பின்னர் கிண்டலடிப்பது அற்பத்தனம்.

அவர் அப்படிச் செய்வதில் ஆச்சரியம் இல்லை. அவருக்கு நான் அளித்த பதில்:

‘ஆம். புரிகிறது சார். பிரார்த்தனை, பஜனை, ஹோமம், கதாகாலட்சேபம் எல்லாம் செய்து விட்டு மசூதிகளை இடிப்பதாலும், முஸ்லிம்களைக் கொல்வதாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.”


மேலே உள்ள பதிவை காபி, பேஸ்ட் செய்த போது இன்னொரு பதிவையும் பார்த்தேன். அது கீழே .நெத்தியடி.


டாக்டர் சுமந்திடம் நோயாளி வந்தால் சனாதனக் கருத்தியலின் படி இது உனது கர்மா. இதற்கு அறிவியலில் மருந்தோ வேறு தீர்வோ இல்லன்னு சொல்லிட்டு ஃபீஸ் மட்டும் கொடுத்துவிட்டுப் போயிடுங்கன்னு சொல்வாராமே?

மெய்யாலுமா?

இதை படித்தால் சுமந்து இனிமே வாயே திறக்கக் கூடாது. ஆனாலும் வழக்கமான வன்மத்தை வெளிப்படுத்துவார்.

ஏனென்றால் சங்கிகளுக்கு எப்போதுமே வெ.மா.ரோ.சூ.சொ எதுவுமே கிடையாது.

No comments:

Post a Comment