Tuesday, December 17, 2019

ஒத்தி வைக்கப்படவில்லை. வதந்தி

எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணி நியமனத்திற்கான முதல் கட்ட நுழைவுத் தேர்வு அக்டோபர் இறுதியில் முடிந்தது.

அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிச் சுற்றுத் தேர்வு வரும் 22.12.2019 அன்று நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி யின் செயல் இயக்குனரின் அறிக்கை போல ஒரு வதந்தியை சில விஷமிகள் வாட்ஸப்பில் சுற்றவிட்டுள்ளனர்.

ஆனால் அது தவறான தகவல். வதந்தி என்று எல்.ஐ.சி நிர்வாகம் தெளிவு படுத்தி விட்டது.

ஆகவே திட்டமிட்டபடி

22.12.2019 அன்று எல்.ஐ.சி இறுதிச்சுற்று நுழைவுத் தேர்வு கண்டிப்பாக நடக்கும்.



இத்தகவலை தயவுசெய்து பரப்புங்கள். 

பல்லாயிரக்கணக்கானவர்களின்  எதிர்காலம் தொடர்பான ஒரு விஷயத்தில் இப்படி வதந்திகளை பரப்புவது எவ்வளவு கேவலமான செயல்!

கோடிக்கணக்கான இந்தியர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த பொய்ப்பிரச்சாரமும் போட்டோஷாப் மோசடியும் செய்வதாக மத்திய அரசே இருக்கும் போது சில விஷமிகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

No comments:

Post a Comment