Tuesday, December 24, 2019

பெரியார் என்றால் இன்னும் பயம் . . .


தந்தை பெரியார் மறைந்து நாற்பத்தி ஆறு வருடங்களாகி விட்டது.

ஆனாலும் அந்த பெயரை நினைத்தாலே சங்கிகளுக்கு நடுங்கிறது. சங்கிகளை துரத்தி துரத்தி அடிக்கும் மண்ணாக தமிழகம் இருப்பதற்கு பெரியார் அமைத்த சமூக நீதி அடித்தளம் காரணம் என்பதால் பெரியார் என்ற பெயரே  சங்கிகளுக்கு எரிச்சலும் அச்சமும் தருகிறது.

அதனால்தான் அவரை இழிவு படுத்த முயற்சிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதிலும் நேற்றைய சென்னைப் பேரணி சங்கிகளின் உறக்கத்தை கெடுத்து விட்டது போல . . .

அதனால்தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்கள்.


ஆனால் பாவம் இதற்கும் அடிதான் வாங்கினார்கள்.

பதிமூன்று வயதுப் பெண்ணை பால்ய விவாகம் செய்த குற்றவாளி மோடியை பாக்சோவில் கைது செய் என்று சொல்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பாலியல் குற்றவாளிகள் நிரம்பிய கயவர்களைக் கொண்ட கட்சி என்பதை வேறு பட்டியலிட பதிவை நீக்கி விட்டு பதுங்கி விட்டார்கள்.

சங்கிகளுக்கு பெரியார் என்றால் வருகிற 

அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு 

No comments:

Post a Comment