Monday, December 30, 2019

வாழ்த்துக்களும் எச்சரிக்கையும் சோரேன் . .



ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள் ஹேமந்த் சோரேன்.

உங்களது வெற்றி இந்த சூழலில் மிகவும் முக்கியமானது.

இயற்கை வளங்கள் நிரம்பிய மண் உங்கள் மண்.  ஆனால் இங்கிருந்து எடுக்கப்படும் எந்த கனிமமும் இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ்வில் வளம் உருவாக உதவவில்லை. வெள்ளைக்காரர்கள் காலம் முதற்கொண்டு இன்றைய கொள்ளைக்காரர்கள் காலம் வரை முதலாளிகளும் தரகர்களும் பிழைக்கத்தான் ஜார்கண்ட் மண்ணின் செல்வங்கள் பயன்பட்டுள்ளன. 

உங்கள் மண்ணின் மகத்தான வீரன் பீர்ஸா முண்டா வின் வாழ்க்கை வரலாறு  நீங்கள் அறியாதது அல்ல. அதை மீண்டும் மீண்டும் படியுங்கள். உங்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலாவது சுரண்டப்பட்ட உங்கள் மக்கள் வாழ்வில் ஒளியேற்ற முயற்சியுங்கள்.

நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமும் இதுதான். 

சின்னஞ்சிறு மாநிலமாக இருந்தாலும் அங்கே பில்லா-ரங்கா கிரிமினல் கோஷ்டி தோற்றுப் போயிருக்கிறது. சாணக்கிய சதிகாரன் இந்த தோல்வியை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டான். அவர்களின் கூட்டாளி தேர்தல் ஆணையம் முடிவுகளை தாமதமாக அறிவித்ததே ஏதேனும் மோசடி செய்ய முடியுமா என்று முயற்சிப்பதற்கே.

அடிபட்ட அந்த கொடிய விஷப் பாம்புகள் பணம் கொடுத்தோ அல்லது மிரட்டியோ உங்கள் கட்சி எம்.எல்.ஏ க்களையோ அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ க்களையோ இழுக்க முயற்சிப்பார்கள். எந்த கேவலத்திற்கும் தயங்காத கேடு கெட்ட கூட்டம் அது. அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.

ஆட்சிக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆட்சியை தக்க வைப்பதற்கும் வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment