Thursday, December 5, 2019

குற்றவாளிகளுக்கோர் நற்செய்தி . . .



கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி, செயின் திருட்டு, பாலியல் வன் கொடுமை, ஆவணக் கொலை, ஊழல், பண மோசடி, வங்கிகளை ஏய்த்தல் உள்ளிட்ட அனைத்து விதமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் ஓர் நற்செய்தி.

நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைந்து விட்டால் உங்களின் அனைத்து குற்ற வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டு உங்கள் மீது கங்கை ஜலம் தெளிக்கப்பட்டு நீங்கள் புனிதராக மாற்றப்படுவீர்கள்.

ஆமாம். 



அது மட்டுமல்ல தீண்டாமைச்சுவர் கட்டி ஆணவக் கொலை செய்த சக்ரவர்த்தி துகில் மாளிகை முதலாளி சிவசுப்ரமணியனுக்கு வழங்கப் பட்டது போல உங்களுக்கு சட்ட உதவி, போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கிடைக்கும்.

உங்களுக்கு எதிரானவர்களை கைது செய்ய ஏவல் துறையின் சேவையும் கிடைக்கும்.

அனைத்து ரக குற்றவாளிகளும் பாஜகவில் இணைந்து கொள்வீர்.

பாஜக - குற்றவாளிகளால் குற்றவாளிகளால் நடத்தப்படும் குற்றவாளிகள் கட்சி.

BJP - A party of the Criminals by the Criminals For the Criminals

1 comment: