Wednesday, December 11, 2019

மதியற்ற மாறன் பெயரை மாற்றட்டும்



மதிமாறன் என்ற பெயர் கொண்ட ஒரு எழுத்து வியாபாரியின் பதிவு இது



என்னமோ அதிபுத்திசாலித்தனமாக எழுதி விட்டதாக ஒவ்வொரு வருடமும் அதே பதிவை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா 

என்று முதல் வரியில் சொல்லி விட்டு
அடுத்த வரியில்

குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று அதே கருத்தை இன்னும் அழுத்தமாக வலியுறுத்துவதை இந்த மதி கெட்ட மாறன் நக்கலடிக்கிறார்.

இவ்வளவு பேசும் இந்த மனிதன் மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவர் இடிந்து 17 பேர் இறந்து போனது குறித்து எழுதியுள்ளதை பாருங்கள்.


தீண்டாமைச் சுவர் என்பதையும் அது ஒரு ஆதிக்க ஜாதி ஆணவக் கொலை என்பதையும் மூடி மறைக்கிற புண்ணியவான், அடுத்தவர்களை மட்டும் ஜாதியப் பார்வையோடு திட்டிக் கொண்டே இருப்பார்.

மதி கெட்ட மனிதனுக்கு பெயரில் மட்டும் எதற்கு மதி?
மண்ணாங்கட்டி மாறன் என்று மாற்றிக் கொள்ளட்டும். . .


No comments:

Post a Comment