Thursday, December 19, 2019

ரோஜாவின் ஊடே ஒரு வரலாறு



தாக்குதலைத் தொடங்க எப்போது ஆணை கிடைக்கும் என்று வெறியோடு, கையில் தடியோடும் துப்பாக்கியோடும், உடலெங்கும் கவசத்தோடு காத்திருக்கும் சீருடை அணிந்த நவீன மிருகங்கள், ரோஜா மலரை புன்னகையோடு நீட்டும் பெண்ணின் செயல் கண்டு திகைத்து நிற்கின்றன.

ஆனாலும் அவர்களை நம்ப முடியாது. அழிவுக்கான ப்ரொக்ராம் மட்டும் எழுதப்பட்ட அந்த தாக்குதல்கள் இயந்திரங்களுக்கு நேசமும் நியாயமும் என்றைக்கும் புரியாது.

ஆனாலும் இப்படங்கள் கலவரங்களுக்கு காரணம் யார் என்பதை உலகிற்கு என்றென்றும் உணர்த்திக் கொண்டிருக்கும்.

அப்பெண்ணின் கையில் உள்ள அட்டையில்

"நான் வரலாறு படிப்பதாக 
என் தந்தை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்குத் தெரியாது,
"நான் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று

ஆம் பெண்ணே,
நிஜம்தான்.
அடக்குமுறைக்கு அஞ்சாமல்
நேர் கொண்ட பார்வையோடு
ரோஜாக்களின் ஊடே 
நீ
வரலாறு படைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்!

No comments:

Post a Comment