Wednesday, December 25, 2019

மனமெல்லாம் அங்கேதான் . . .



இன்று வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

2004 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த எங்கள் தோழர்களோடு அங்கே சென்று கொண்டு இருக்கிறேன்.

உச்சகட்ட தியாகம் புரிந்த தோழர்களின் நினைவகத்தில் நிற்கையில் ஏற்படும் உணர்வுகளை இன்று வரை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயல முடியவில்லை.

நம்மை புதுப்பித்துக் கொள்ளும் ரீசார்ஜ் பயணமாகவே நான் வெண்மணி பயணத்தை பார்க்கிறேன்.

சிறிய உடல் நிலை நலிவு காரணமாக இந்த வருடம் வெண்மணி பயணத்தில் மற்ற தோழர்களோடு இணைய முடியவில்லை.

ஆனாலும் மனம் என்னமோ அங்கேதான், வெண்மணியில்தான் உள்ளது. அந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பது உடல் உபாதையை விட பெரிதும் வலிக்கிறது.

அடுத்த வருடம் கலந்து கொள்வோம் என்ற நம்பிக்கை அந்த வலிக்கு மருந்தாக இருக்கிறது.

கலந்து கொண்ட எங்கள் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்.

உங்கள் தியாகம் இந்த மண்ணில் மாற்றம் வர போராடுபவர்களுக்கு என்றென்றும் எழுச்சி தரும் . . .

No comments:

Post a Comment