Sunday, January 29, 2017

சேர்க்கை சரியில்லை பன்னீரு


முதுகெலும்பு இல்லாமல் எப்போதும் வளைஞ்சே இருப்பவராக,
தடால் தடால் என்று அம்மா, சின்னம்மா காலில் விழுபவராக,
எப்போதும் பணிவு வேடத்தோடு காட்சியளித்தாலும்  காசை அள்ளுவதில் மட்டும் என்னவோ கவனமாகத்தான் இருந்தீர்கள் பன்னீர்.

மணல் கொள்ளை சீராக நடந்து அதிகார மையத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதிலும் பொதுப்பணிததுறை ஒப்பந்தங்களுக்கான கமிஷன் தொகையினை கறாராகப் பெற்றுக் கொள்வதிலும் நீங்கள் கவனமாகவே இருந்தீர்கள் என்பதை சேகர் ரெட்டி வாயிலாக தமிழகம் அறிந்து கொண்டது. அப்போது கூட வாய் திறக்க்காமல் அமைதியின் வடிவமாய் காட்சியளித்தீர்கள்.

சட்டப்பேர்வைத் தேர்தலுக்கு முன்பாக நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கணக்கு பார்க்கப்பட்டு பங்குத் தொகை, அபராதம், அபராத வட்டி எல்லாம் வசூலிக்கப்பட்ட பின்பே விடுதலையானீர்கள் என்று ஊடகங்கள் கழுவி கழுவி ஊற்றியபோது கூட பன்னீர் என்றால் பணிவு என்றுதான் இருந்தீர்கள்.

மூன்றாவது முறை முதலமைச்சர் ஆன போதும் சரி, அந்த நாற்காலியின் கால்களை சின்னம்மாவிற்காக உடைக்க உங்கள் அமைச்சரவை சகாக்கள் மற்றும் தம்பிதுரை வகையறாக்கள் கிளர்ந்து எழுந்த போதும் சரி அடக்கத்தின் மறு உருவமாகவே தோன்றினீர்கள்.

விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து ஆன்ந்தராஜ் அடித்த போது அதை பொறுமையோடு ஏற்றுக்கொண்ட மாணிக்கம் ரஜனிக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் என்றுமே இருந்ததில்லை.

ஆனால் இப்போதோ

ஒசாமா பின் லேடன் என்று பேசுகிறீர்கள்.
சமூக விரோதிகளின் ஊடுறுவல் என்று கதைக்கிறீர்கள்.
போலீஸ் லேசா தட்டியது என்று முழு பூசணியை சோற்றில் மறைக்கிறீர்கள்.
பீச்சில் போராட தடை போடுகிறீர்கள்.
தேசத்துரோகிகள் என்று சொல்ல தொடங்கியுள்ளீர்கள்?

மாணிக்கம் பாட்சாவாக மாறும் நிலையோ இது?

ஆனால் உங்கள் வீரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே காண்பிப்பது கதாநாயக பாத்திரத்தின் குணாம்சம் அல்லவே, வில்லனுடையதாயிற்றே?

எங்கிருந்து வந்தது இந்த திடீர் மாற்றம்?


ஜல்லிக்கட்டைத் தவிர காவிரி, மணல் கொள்ளை, பன்னாட்டு குடிபானம் பற்றியெல்லாம் பேசினார்கள் என்று கொதித்துள்ளீர்களே, அதுதான் உங்களின் போலீசை அராஜகமாக தாக்க உத்தரவிட்டதன் மர்மமோ?

உங்கள் தொழில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவராயிற்றே! ஆக அது காரணமாக இருக்காது.


பின்னே?

உங்கள் வசனங்கள், நடவடிக்கைகள் எங்களுக்கு புதிதல்ல. இரண்டரை வருடமாக இந்தியாவில் மோடி ஆட்சியின் அசிங்கத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! அதே துர்நாற்றம் எப்படி உங்களின் வாயிலிருந்தும் வருகிறது?


ராமாயணத்தில் வாலி தன் முன்னே தோன்றுபவர்களின் சக்தியில் பாதியை எடுத்துக் கொள்வானாம். அதற்கு பதிலாக இரண்டு முறை சமீபத்தில் மோடியைப் பார்த்து விட்டு வந்தீர்கள். அவர் தனது கெட்ட புத்தியை உங்களுக்கு அளித்து விட்டார் போலும். அதனால்தான் காவிக் கூட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

எதுவும் செய்யாத மிக்ஸர் பன்னீராக இருந்தால் கூட பரவாயில்லை. வரலாறு உங்களை மன்னிக்கும். காவிக்கூட்ட அடிமையாக மாறினால் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் கூட உங்களுக்கு இடம் கிடைக்காது.  
 

6 comments:

  1. sir!
    indha post-la ulla videos
    patthiyum unga karuthu please

    https://vimarisanam.wordpress.com/2017/01/28/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

    -Y Anna.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற, காமை அவர்கள் ஆளும் கட்சியின் தீவிர அல்லக்கை. நியாயம் என்பதை எப்போதும் அவர் பேச மாட்டார்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. As I said earlier, You are NOT WORTH for any reply and even for making comment

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete