Friday, January 27, 2017

தமிழன் என்று சொல்லாதே, தலை குனிய வைக்காதே




தமிழர்களின் மானம் இன்னொரு முறை கப்பலேறியுள்ளது.

சில வருடங்கள் முன்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு தொடர் ஒன்றை வெளியிட்டது. தமிழகத்தின் அரசியல்வாதிகளில் என்.டி.திவாரி போன்ற சபலப் பேர்வழிகளின் பட்டியலை வாரம் ஒருவராக வெளியிட்டு அம்பலப் படுத்தியது. அந்த பட்டியலில் இருந்த ஒருவர்தான் இப்போது மேகாலயாவில் பதவி விலகிய காவிக்கூட்டத்தின் கவர்னர். ஆக இந்த செய்தி ஒன்றும் அதிர்ச்சி அளிக்கவில்லை.

அந்த பட்டியலில் இருந்த அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு ஒரு மாநிலத்திற்கு வேறு ஒரு பொறுப்பில் போயிருக்கிறார். 

என் கவலையெல்லாம் இவராவது அங்கே ஒழுங்காக இருப்பாரா என்பதுதான்.

அய்யா, புண்ணியவான்களே,  என்ன எழவாவது செய்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்ளாதீர்கள். 

உங்கள் அசிங்களுக்காக தமிழர்களை தலை குனிய வைத்திடாதீர்கள்.

பி.கு 1 : அதெப்படி காவிகளின் எல்லா பிரம்மச்சாரிகளும் களங்கமானவர்களாகவே இருக்கிறார்கள்? 

பி.கு 2 : ஒரு வேளை, இந்த ஆளை மனசுல வைச்சுக்கிட்டுத்தான் சுனாசாமி அடிக்கடி பொர்க்கி என்று சொல்றாரோ?


3 comments:

  1. வெள்ளைத்தாளில் ஒரு கறுப்புப் பொட்டு.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைத்தாள் எல்லாம் கிடையாது. எல்லோருடைய யோக்கியதையும் ஒன்றுதான். இது மாட்டிக் கொண்ட கறுப்பாடு

      Delete