Friday, November 6, 2015

இவங்க மதுரக்காரங்களை மிஞ்சிடுவாங்களோ?




நேற்று முன் தினம்  புதுவை சென்றிருந்தேன். அங்கே இந்த சுவரொட்டி கண்ணில் பட்டது.

பொதுவாக வித்தியாசமான சுவரொட்டிகளை அச்சிட்டு  மதுரைக்காரர்கள்  அசத்துவார்கள். அவர்களுக்கு சவால் விடக்கூடிய விதத்தில் இந்த சுவரொட்டி அமைந்துள்ளது.

யார் இவர் என்று புதுவைத் தோழர்களிடம் விசாரித்த போது முன்பு தலைமைச் செயலாளராக இருந்தவர் என்றும் வேறு புதிய தலைமைச் செயலாளரை மத்தியரசு நியமித்த போதும் புதுவை முதல்வர் ரங்கசாமி இவரை புதுவையை விட்டு அனுப்பாமல் இப்போது கல்வித்துறை செயலாளராக வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

இவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் என்று இவருக்கு ஆதரவாக தின மலர் கட்டுரை எழுதியிருப்பதாகவும் ஒரு தோழர் தகவல் சொன்னார்.

தின மலர் இவரை ஆதரிக்கிறது என்றால் இவர் கண்டிப்பாக வில்லங்கம் பிடித்த ஆசாமியாகத்தான் இருப்பார்.

 

4 comments:

  1. வித்தியாசமான பார்வைதான்.

    ReplyDelete
  2. அட! ஆச்சர்யபட வைக்கும் சுவரொட்டி!

    ReplyDelete
  3. இப்படி கூடவா ஒட்டுவார்கள்?!

    ReplyDelete