Sunday, November 22, 2015

அச்சம், பயம், தாக்குதல்







மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் காட்டாட்சிக்கு எதிராக விரிவான பிரச்சார இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடக்கவுள்ள சிறப்பு மாநாட்டிற்கு முன்னோட்டமாக இந்த பிரச்சார இயக்கம் நடக்கிறது 

மக்களின் வரவேற்பு பெருகி வருவதால் மம்தா தீதிக்கு அச்சம் வந்து விட்டது. ஆட்சியை பறி கொடுத்து விடுவோமோ என்ற பயம் பெருகி விட்டதால் வழக்கம் போல ரௌடித்தனத்தில் இறங்கி விட்டார்.

திரிணாமுல் குண்டர்கள் நேற்று சில இடங்களில் பிரச்சார இயக்கத்தில் குறுக்கே புகுந்து தாக்கியுள்ளார்கள். முன்னாள் எம்.பி, இந்நாள் எம்.எல்.ஏ என தாக்கப்பட்டுள்ளார்கள். மம்தாவின் ஏவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல்களுக்கு அஞ்சாமல் பிரச்சாரம் நடக்கிறது, தொடர்கிறது. மம்தா ஆட்சிக்கு முடிவுரை விரைவில் மேற்கு வங்க மக்களால் எழுதப்படும்.

 

No comments:

Post a Comment