Friday, March 13, 2015

ஹேமா மாலினி, ஸ்மிர்தி இராணி - சரிப்பட்டு வர மாட்டாங்க போல




பாஜக தலைவர் அமித் ஷா அக்கட்சியின் தேசிய செயற்குழுவை மாற்றி அமைத்துள்ளார். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. பொதுவாகவே எந்த கட்சியின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி நான் எழுதுவதே கிடையாது. ஆனாலும் அமித் ஷா செய்துள்ள ஒரு மாற்றம் ஒரு செய்தியை இந்தியாவிற்கு தெரிவிக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து விஷத்தைக் கக்கிக் கொண்டு இருக்கிற சாத்வி நிரஞ்சனா ஜோதி, சுவாமி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கு முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வன்மத்தையும் வக்கிரத்தையும் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருப்பவர்களை நாங்கள் ஊக்கப்படுத்துவோம் என்பதுதான் மோடியின் வலது கை அமித் ஷா உணர்த்தியுள்ள செய்தி.

பாவம் இதிலே படவி இழந்திருப்பவர்கள் ஸ்ம்ர்தி இராணியும் ஹேமா மாலினியும்.

அமித் ஷா எதிர்பார்க்கிற ரேஞ்சுக்கு அவங்களால பேச முடியாது போல!
 

No comments:

Post a Comment