Friday, March 6, 2015

தவறிழைத்தது அமைச்சரா? மாவட்டச் செயலாளரா?

 

வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவர் அதிமுக கட்சியில் வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சித்தலைமை நீக்கியுள்ளது.

கடந்த பத்து நாட்களாகவே அவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. நெல்லையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி திரு முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள இந்த அமைச்சர்தான் காரணம் என்பதே அச்செய்தி.

வேளாண்மைத்துறையில் தற்காலிக ஓட்டுனர்கள் பணி நியமனத்தில் மந்திரி கொடுத்த பரிந்துரையை ஏற்காமல் நியாயமாக நடந்து கொண்டதால் வருமானம் பாதிக்கப்பட்டதால் அத்தொகையை வழங்க வேண்டும் என்று  அளிக்கப்பட்ட நிர்ப்பந்தம்தான் அந்த அதிகாரியை தற்கொலையை நோக்கி தள்ளியிருக்கிறது என்பதுதான் அமைச்சர் மீது வைக்கப்பட்ட புகார்.

அதிமுக தலைமை அவரை கட்சிப் பதவிலிருந்து நீக்கியுள்ளது. அமைச்சர் மீதான நடவடிக்கை இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

தவறு அமைச்சர் என்ற பதவியின் காரணமாக நிகழ்த்தப்பட்டதா?
இல்லை மாவட்டச் செயலாளர் என்ற ரீதியில் செய்ததா?

அமைச்சர் பதவியிலிருந்து ஏன் அவரை நீக்கவில்லை?

ஒரு வேளை இப்படி இருக்குமோ?

மாவட்டச் செயலாளரை  நீக்கும் அதிகாரம் ஜெ விற்கு உண்டு.
ஆனால் சட்டபூர்வமான முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸிற்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது. அப்படி ஒரு அதிகாரத்தை பெயரளவிலாவது ஏன் தர வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்குமோ?
 

 

2 comments:

  1. இது ஒரு ரப்பர் ஸ்டாம்புதானோ....
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும் நண்பரே...
    கில்லர்ஜி

    ReplyDelete