Tuesday, March 10, 2015

ஸ்மார்ட் போன் கொடையாளர்கள்/நோயாளிகள்


Image result for cmc blood bank

 

 

இன்று சி.எம்.சி ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்யச் சென்றிருந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்த ரத்த வங்கியில் மொத்தம் ஐந்து படுக்கைகள். ரத்தம் எடுப்பதற்கு முன்பான சோதனைகள் முடிந்த பின்பும் ரத்தம் கொடுப்பதற்கு காத்திருப்பது என்பது தவிர்க்க முடியாதது. ரத்தம் எடுப்பது என்பதும் ஒருவருக்கு குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் (எல்லா நடைமுறைகளுக்கும் சேர்த்து) ஆகி விடும்.

குருதிக் கொடையாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கையில் காத்திருப்பின் நேரமாகும் போது "எவ்வளவு நேரமாகும்" என்ற எரிச்சல் குரலை பல மொழிகளில் கேட்க முடியும். முன்னும் பின்னும் நடப்பார்கள். கண்ணாடி வழியே எட்டிப்பார்ப்பார்கள். சலிப்பும் அலுப்புமாக இருப்பார்கள்.

ஆனால் இன்று நான் பார்த்த காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த இடமே மிகவும் அமைதியாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக  புற நோயாளிகள் பிரிவிற்குப் போன போதும் வழக்கமான சப்தம் குறைவாகவே இருந்தது.

ஏன் இந்த மாற்றம்?

ஒன்றுமில்லை ஜெண்டில் மேன், 

அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்.

தங்களை அழைப்பதைக் கூட கவனிக்க முடியாத படி சிலர் ரொம்பவே மும்முரமாக மூழ்கியிருந்தனர்.

 

1 comment:

  1. செல்போனினால் அருகில் இருப்பவர்களே மறந்து போய்விடுகிறார்கள்

    ReplyDelete