Tuesday, January 6, 2015

அடுத்து ரூபாய் நோட்டுல கோட்சே படம்தானே?




கோட்சேவிற்கு சிலை வைக்கச் சொல்லி விட்டார்கள்.
பிறகு கோயில் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்கள்.
இப்போது கோட்சேவால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி படத்தை ரூபாய் நோட்டிலிருந்தும் எடுக்கச் சொல்லி விட்டார்கள்.

அடுத்து எங்கே வருவார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

கோட்சேவின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுங்கள் என்று சொல்வார்கள்.

அது தவறு என்று அவர்கள் கூட்டத்திலேயே ஒருவர் சொல்வார்.
இதிலென்ன தவறு என்று இன்னொருவர் கேட்பார்.

இப்படி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தம் இல்லாமல் இந்தியா வருகிற ஒபாமாவிற்கு இந்தியாவை விருந்து கொடுத்து விடுவார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பேசாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கோட்சே படத்தைப் போட்டு அவர்களே ரூபாய் நோட்டை அச்சிட்டு அவர்களுக்குள் புழக்கத்திற்கு விடலாம். அம்பானி, அதானி ஆகியோரிடம் கொடுத்தால் அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்களா என்ன?

அவர்கள் உதவிக்கு ஒரு மாதிரி நோட்டு உள்ளது. நோட்டின் எண்ணை மறக்காமல் கவனியுங்கள்.


2 comments:

  1. \\அது தவறு என்று அவர்கள் கூட்டத்திலேயே ஒருவர் சொல்வார்.
    இதிலென்ன தவறு என்று இன்னொருவர் கேட்பார்.

    இப்படி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தம் இல்லாமல் இந்தியா வருகிற ஒபாமாவிற்கு இந்தியாவை விருந்து கொடுத்து விடுவார்கள்.//

    அருமை.

    \\நோட்டின் எண்ணை மறக்காமல் கவனியுங்கள்.//

    அடக்க மாட்டாத சிரிப்பு வருகிறது.பொருத்தமான எண்தான்.

    ReplyDelete
  2. April Fool Cheating... but why 3 times?

    ReplyDelete