Tuesday, May 1, 2012

கலைஞர் ஐயா, ஸ்க்ரிப்ட் மாறிப் போச்சா?



கலைஞர் கருணாநிதி திடீரென தமிழ் ஈழ ஆதரவாளராக மாறி விட்டார். நாளுக்கு நாள் அவர் பேசும் வேகமான பேச்சுக்களைப் பார்க்கிற போது கூடிய சீக்கிரம் திமுக உறுப்பினர்கள் எல்லாம் கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்தி படகேறி இலங்கை சென்று சண்டை போடப் போகின்றார்கள் என தோன்றுகின்றது.

ஈழம்தான் கனவு என்ற ஞானோதயம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலா அல்லது சி.ஐ.டி காலனியிலா, எங்கே போதி மரம் புதிதாய் முளைத்துள்ளது என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

கலைஞருக்கு எப்போதெல்லாம்  குடும்பத்தில் பிரச்சினை வருகிறதோ அல்லது மக்கள் மத்தியில் அதிருப்தி வருகின்றதோ அல்லது ஊடகங்கள் வறுத்தெடுத்தாலோ அவர் வழக்கமாக கையாளும் நாடகம் “ நான்  சூத்திரனாக இருப்பதால்தான் இப்படி நடக்கிறது ” என்ற வசனங்களைத்தான்  பேசி பிரச்சினையை திசை திருப்புவார்.

இப்போது  அந்த வசனத்திற்குப் பதிலாக ஈழம் வசனத்தை எடுத்துள்ளார்.

ஒரு வேளை அவர் உதவியாளர் சண்முகநாதனுக்கு வயதாகி விட்டதால் அந்த ஸ்கிரிப்டுக்குப் பதிலாக ஈழம் ஸ்கிரிப்டை எடுத்து கலைஞருக்கு கொடுத்து விட்டாரோ ?

No comments:

Post a Comment