Thursday, May 17, 2012

அமைச்சர்களுக்கு அப்படி என்ன கிழிக்கிற வேலை?



நேற்று நாடாளுமன்ற மக்களவைக் காட்சி இது. பூஜ்ஜிய நேரம்
என்று அழைக்கப்படுகின்ற சீரோ ஹவரில்  கபில் சிபல் தவிர
வேறு மத்திய அமைச்சர் யாருமே இல்லை.

பிரதமர் உட்பட முப்பத்தி நான்கு கேபினட் அமைச்சர்கள்,
தனிப் பொறுப்போடு எட்டு இணை அமைச்சர்கள், 
முப்பத்தி ஏழு  இணை அமைச்சர்கள் என மொத்தம் உள்ள
எழுபத்தி ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும்தான்
மக்களவையில் இருந்தார் என்றால், இவர்கள் நாடாளுமன்ற
ஜனநாயகத்தை மதிக்கும் லட்சணம் இதுதான்.

பூஜ்ஜிய நேரம்தான் முக்கியப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள்
எழுப்பும் நேரம். இதில் கூட இல்லாமல் இவர்கள் எல்லாம்
எங்கே போய்த்தொலைந்தார்கள்?

காண்டீனா இல்லை அமைச்சர் பங்களாவில் சுகமாக 
உறங்கிக் கொண்டிருந்தார்களா?

நாடாளுமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும் என்று 
மூன்று நாட்கள் முன்பாகத் தான் எல்லோரும் பேசியுள்ளார்கள்.

மிகப் பெரிய வெட்கக் கேடு.

பி.கு : கபில் சிபல்ஜி , யாருமே இல்லாமல் தனியாக இருக்க
பயமாக இல்லை?
 

No comments:

Post a Comment