Thursday, August 28, 2014

குரங்குகளைக் கூட கெடுத்துட்டாங்களே




நேற்றைய ஜூனியர் விகடன் இதழில் உணவு யுத்தம் பகுதியில் திரு எஸ்.ராமகிருஷ்ணன் உருளைக்கிழங்கு சிப்ஸ் பற்றி எழுதியதைப் படித்ததும் சமீபத்தில் நான் பார்த்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது.

சமீபத்தில் திருச்சூரில் ஒரு கூட்டத்திற்கு செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் எனது வண்டிக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு பயணி இரண்டு பாக்கெட் லேஸ் சிப்ஸும் ஒரு பாக்கெட் மேரி பிஸ்கட்டும் வாங்கி ஒரு கேரி பேக்கில் போட்டு உட்கார்ந்திருந்தார்.

காட்பாடி ரயில்வே சந்திப்பு குரங்குகளுக்கு பிரசித்தி பெற்றது. எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு அவர் கையில் இருந்த பேக்கை பிடுங்கிக் கொண்டு போனது. கொஞ்ச தூரம் போனதும் அந்த பையில் இருந்த மேரி பிஸ்கெட்டை தூக்கிப் போட்டு விட்டு சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு அதை பிரித்து சாப்பிட ஆரம்பித்து விட்டது

குழந்தைகளைத்தான் இந்த லேஸ் சிப்ஸ் சாப்பிட வைச்சு கெடுக்கறாங்கனு பார்த்த குரங்குகளைக் கூட விட மாட்டேங்கறாங்க!

என்ன கொடுமை சார் இது?
 

1 comment: