Monday, April 20, 2026

குஜராத்தில் குழந்தைகள் குறையுது. செலவு ???????

 


குஜராத் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் 

2022-23 ம் ஆண்டில் 42,21,257 குழந்தைகளுக்காக 1,035.84 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அதுவே

2024-25 ம் ஆண்டில் பயன் பெற்ற குழந்தைகள் எண்ணிக்கை 40,44,689. 

ஆனால்

செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தொகை 1,626.08 கோடி ரூபாய்.

1,76,568 குழந்தைகள் குறைந்துள்ளனர்.

ஆனால் செலவு மட்டும் 590.26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு என்று காரணம் சொல்கிறார்கள்.  

என்னத்தான் விலைவாசி உயர்வு என்றாலும் குறைந்த குழந்தைகள் எண்ணிக்கை அதை ஈடு செய்து விடும்.

மாறாக உயர்கிறது என்றால் 

அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான்.

ஊழல்.

குழந்தைகளின் உணவைச் சொல்லி கொள்ளையடிப்பதுதான்  குஜராத் மாடல்.

இதிலே கவலையளிக்கிற ஒரு தகவலும் இருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகள் குறைகிறது என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது என்பதன் அடையாளமும் கூட. 

இப்படிப்பட்ட மோசமான குஜராத் மாடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டுமா மிஸ்டர் எடப்பாடி?


No comments:

Post a Comment