தங்களை தற்குறிகள் என்று அழைத்தால் தவெகவினர் வருத்தப்படுகிறார்களாம்.
கீழேயுள்ள பதிவுகளை பாருங்களேன்
ஒரு வாக்காளரால் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அப்படி வாக்களித்தால் அது கள்ள ஓட்டாக மட்டுமே இருக்க முடியும் என்பது கூட தெரியாமல், திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்ற விஷயமும் கூட தெரியாமல் பதிவெழுதுகிற ஒரு ஆளை தற்குறி என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்!
சரி கவுண்டம்பாளையம் விஜயகுமாருக்கு வாக்கு எங்கே இருக்கிறது? கவுண்டம்பாளையத்திலா? பெரம்பூரிலா அல்லது திருச்சியிலா?
அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இருந்தால் மோடி,அமித்ஷா வகையறாக்கள் நடத்திய SIR கூட வெறும் ஜும்லாதானா?



No comments:
Post a Comment