Monday, April 13, 2026

தந்தை நாட்டின் பெயர் சொல்ல தைரியமில்லையா மோடி?

 


இரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் இருக்கும் சூழலில் அதனை சீர்குலைக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றது.

அத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டைக்காயையும் விளக்கெண்ணெயையும் சேர்த்து ஒரு அறிக்கை.

லெபனான் மீதான தாக்குதலுக்காகவும் உயிரிழப்பிற்காகவும் வருந்தி இனி இப்படி ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பது நலம் என்ற ரீதியில் அந்த அறிக்கை செல்கிறது.

தாக்குதல் நடத்திய இஸ்ரேல் கண்டிக்கப்படவே இல்லை. ஏன் இஸ்ரேலின் பெயர் கூட எந்த இடத்திலும் இல்லை.

தந்தை நாட்டின் மீது அவ்வளவு பயமா மோடி?

இஸ்ரேல் உங்களுக்கு கொடுத்த ‘Speaker of the Knesset Medal’  விருதை பறித்து விடுவார்கள் என்ற பயமா?

3 comments: