காப்பான் திரைப்படத்தின் ஒரு காட்சியை கீழேயுள்ள காணொளியில் பாருங்கள்.
அந்த வில்லனின் இடத்தில் அதானி, அம்பானியை வைத்துப் பாருங்கள். வில்லனின் ஆலோசனையை மறுக்கும் ஆர்யா, சூர்யாவின் இடத்தில் தமிழக, கேரள முதல்வர்கள், கம்யூனிஸ்டுகள், விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோரை வைத்துப் பாருங்கள்.
காட்சியின் இறுதியில் வில்லன் கொதிப்பது போலத்தான் இப்போது நிர்மலா அம்மையார் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படத்தின் இறுதியில் எப்படி வில்லனின் சூழ்ச்சி முறியடிக்கப்படுமோ அது போல நெல், கோதுமை உற்பத்தியை நாசமாக்க நினைக்கும் மோடி, நிர்மலா வகையறாக்களின் சதியும் தோற்றுப் போகும்.
பிகு: காப்பான் திரைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது பிரதமர் மோகன்லால் தாடி வைத்திருந்ததால் மோடியை குறிப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். இன்னொரு முறை தொலைக்காட்சியில் பார்த்த போதுதான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. அது தனி பதிவாகவே எழுத வேண்டிய ஒன்று.

No comments:
Post a Comment