ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற அமைப்பு ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுக்களின் அடிப்படையில் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன் அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்ட் கீழே உள்ளது.
இங்கே உள்ளது கடுமையான குற்றங்களான கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் விபரங்கள்.
இந்த பட்டியலில் எங்கள் கட்சியே இல்லை பாருங்கள், எங்கள் வேட்பாளர்கள் யாரும் குற்றப்பின்னணி இல்லாதவர்கள் என்று சீமான் கட்சியினர் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியா? நிஜமா?
ADR இணைய தளத்திற்கு சென்று ஆராய்ந்தேன்.
சீமான் கட்சியின் 234 வேட்பாளர்களில் 34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள் என்று அறிக்கை சொல்கிறது.
விஜய் கட்சி இன்னமும் மோசம். 43 பேர் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள்.
இதில் மிகவும் மோசம் அதிமுகதான். இங்கே 60 பேர்.
இதிலே எந்த மோசமான குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள், எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.
தளி ராமச்சந்திரனால் சி.பி.ஐ அந்த பெருமையை இழந்துள்ளது.
சீமான் கட்சியைச் சேர்ந்த 34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்களாக இருந்தாலும் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ஏன் அந்த கட்சியின் பெயர் வரவில்லை.
க்யாரே டீலிங்கா?



No comments:
Post a Comment