மிகவும் கேவலமாக இன்று பேசிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த மிகப் பெரிய அராஜகச் செயல்களில் ஒன்று சாத்தான்குளம் லாக்கப் கொலைகள்.
ஜெய்பீம் படத்தில் காண்பித்த போலீஸ் சித்திரவதைகள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது போலத்தான் சாத்தான்குளம் சம்பவம் அமைந்திருந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை கூடாது என்ற கொள்கை நிலையில் பார்க்கும் போது மரணம் வரை சிறைத்தண்டனை என்று கொடுத்திருக்கலாம். இறுதித் தீர்ப்பில் ஒரு வேளை மரண தண்டனை குறைக்கப்படலாம்.
ஆனாலும் இத்தீர்ப்பு
தன் ஸ்டேஷனுக்கு வருபவர்களை மனிதராக மதிக்காமல் மிருகத்தனமாக சித்திரவதை செய்யும் போலீசாருக்கு மரண பயத்தை அளித்துள்ளது.
இனியாவது இன்னொரு லாக்கப் மரணம் நடக்காமல் இருக்கட்டும். இத்தீர்ப்பு கெட்ட போலீஸிற்கு அச்சத்தை அளிக்கட்டும்.

No comments:
Post a Comment