சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.
இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.
கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.
இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.


No comments:
Post a Comment