மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?
கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.
மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .
அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம்.
கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


No comments:
Post a Comment