Tuesday, August 21, 2012

மம்தாவின் சாதனைப்பட்டியலுக்கு மார்க்சிஸ்டுகள் இணையாக மாட்டார்கள்.




ஒராண்டு காலத்தில் மம்தா பானர்ஜி எந்த சாதனையுமே செய்யவில்லையா? அப்படி எல்லாம் கிடையாது. மம்தா தீதியும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொ(கு)ண்டர்களும் செய்த சாதனைப்பட்டியலை கீழே பாரீர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் / அனுதாபிகள் ;   60

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரின் அலுவலகங்கள் :  627

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சங்க  அலுவலகங்கள்:  216

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் மிரட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட  மார்க்சிஸ்ட் கட்சியினர்: 40,120

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் ஓராண்டில் வசூலிக்கப்பட்ட அபராத / தண்டல் தொகை : 27,86,58,000.00

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் நிர்ப்பந்தங்களால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகள். 3,285

இந்தப் பட்டியல் போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? இதிலே தீதி நேரடியாக காவல் நிலையத்திலிருந்து குண்டர்களை வெளியே கொண்டு வந்தது, பல்கலைக் கழகங்களில் மிரட்டுவது, காங்கிரஸ் கட்சியினரையும் தாக்குவது போன்றவை அடங்காது.

இப்போது சொல்லுங்கள்.

இந்த சாதனைப் பட்டியலுக்கு இடதுசாரிகள் இணையாக முடியுமா?

No comments:

Post a Comment