Friday, February 25, 2011

புதிய சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு உதயம்

உலகெங்கும்  உள்ள  வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில்  பணியாற்றும் 
ஊழியர்களுக்கான  புதிய சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு உதயமாகி உள்ளது. நேற்றும் இன்றும் புதுடெல்லியில்  நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு  நாடுகளில்  உள்ள நிதித்துறை  ஊழியர்களின்  சங்கங்களின் பொறுப்பாளர்கள்  பங்கேற்றனர்.  இப்புதிய கூட்டமைப்பு  கிரீஸ் நாட்டிலிருந்து  செயல்படுகின்ற  உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்போடு (World  Federation of Trade Unions) இணைக்கப்பட்டுள்ளது. 

இவ்வமைப்பின் பொதுச்செயலாளராக  அகில இந்திய வங்கி ஊழியர் சங்க  தோழர் சி.ஹெச .வெங்கடாசலம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். 

இவ்வமைப்பின் செயலாளராக  எங்கள்  அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  தோழர் கே.வேணுகோபால் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வைரவிழாவைக் கொண்டாடும்  இந்நேரத்தில்  இச்செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. 
தோழர் கே.வேணுகோபால்  அவர்களுக்கு வாழ்த்துக்கள். 


புதிய கூட்டமைப்பின் பணிகளும் பயணமும் வெல்லட்டும்.
 

 

No comments:

Post a Comment