Monday, October 13, 2025

நீதி வெல்லும் விஜய் ?????

 


கரூர் நெரிசல் மரண வழக்கை பாஜகவின் பங்காளியான சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த விசாரணையை குஜராத்தில் குடும்பத்தினர் கண் முன்னே கூட்டு பாலியல் வன் புணர்ச்சிக்கு உள்ளாகி குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கொலையாளிகளால் இழந்த பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த கருணையாளர் அஜய் ரஸ்தோகி  மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட எரிச்சலூட்டியது எது தெரியுமா?

"நீதி வெல்லும்" என்று விஜய் சொன்னது.

41 பேர் மரணத்துக்கு காரணமானோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் மணிப்பூருக்கு போகாத மோடி போல பனையூர் வீட்டில் பதுங்கி இருந்து கொண்டு இப்படி திமிரோடு பேசுவது மிகப் பெரிய எரிச்சலாக உள்ளது.

தம்பி விஜய், உன்னுடைய நிதியோ, அல்லது உன் பங்காளி பாஜகவோ இல்லாமல் நிஜமாகவே நீதி வென்றால் அது உனக்குத்தான் பிரச்சினை. உனக்குத்தான் அசிங்கம்.

இது கூட தெரியாமல் அறிக்கை விடும் நீ, உன் ரசிகர்கள் போலவே நீயும் தற்குறிதான். 

No comments:

Post a Comment