Friday, November 17, 2017

பாவம் பிஜேபி, கலாய்க்காதீர்

திருக்குறள் என்று ஒரு நூல் இருப்பதே பாஜக ஆட்களுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது. அதுவும் தருண் விஜய் தான் அகழ்வாராய்ச்சி நடத்தி தமிழிசை போன்றவர்களுக்கு சொன்னாராம்.

திருக்குறளை உலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை எழுதியது திருவள்ளுவரா இல்லை பாரதியாரா என்று ஏதோ கன்ப்யூஸ் ஆகிட்டாங்க. 

அதுக்காக இப்படியா போட்டு அடிப்பீங்க!

திருக்குறளையே இப்போதான் தெரியும் என்கிற போது  அது ஏற்கனவே உலகம் முழுதும் பரவியது, மக்கள் பயன்படுத்தாத சமஸ்கிருதம் உள்ளிட்ட பதினெட்டு இந்திய மொழிகளிலும் இருபத்தி ஒன்று வெளிநாட்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டது, அதிலே பல மொழிபெயர்ப்புக்கள் போன நூற்றாண்டிலேயே நடந்து விட்டது என்பது எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரியும்?

ஏதோ கலவரம் செய்யறது, அண்டா பிரியாணி திருடறது,  சுத்தமான சாலையில் தம்மாத்தூண்டு குப்பையைப் போட்டு சுத்தம் செய்யற மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ரெய்டு நடத்தி மிரட்டறது, இதோட ஏதோ தமிழ் பற்றியும் எழுதியிருக்காங்கன்னு பாராட்டுங்கப்பா . . .



ஊர் உலகமே கலாய்ச்சாலும் ட்விட்டரில் அபத்தமாக எழுதியதை இன்னும் அகற்றாமல் தைரியமாக வைத்து மேலும் மேலும் கல்லடி வாங்கும் மன தைரியம் யாருக்கய்யா இருக்கு?
 

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. ஏண்டா நாயே, இருபத்தி நாலு மணி நேரமும் உனக்கு வேற நினைப்பே கிடையாதாடா?
    எப்போ பாரு ...................பத்தியே எழுதிக்கிட்டு இருக்கயே!
    தெரு நாய் மாதிரி திரியறவனா நீ?

    ReplyDelete
  6. just like vamana jeyanthi in kerala here tiruvalluvar ia replaced by bhrathiyaar, They are doing intentionally. In future thrukural was known to be written by bharathiyaar.

    ReplyDelete