Saturday, November 25, 2017

அண்ண்ன் தெர்மகோல் செல்லூர் ராஜூவையே மிஞ்சிய . . .




தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராஜூவையே மிஞ்சிய மதியுக மந்திரிகளும் நம் நாட்டில் உள்ளனர் என்பதை பிரகடனப்படுத்தவே இந்த பதிவு.

"போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்குத்தான் இந்த ஜென்மத்தில் கேன்ஸர் வருகிறது. ஒருவேளை அவர்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் அவர்களின் அம்மாவோ அப்பாவோ பாவம் செய்திருப்பார்கள். கேன்ஸர் என்பது அவர்கள்  முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் வினை. அனுபவித்துத்தான் ஆக வேண்டும்"

இப்படி சொன்னவர் ஒரு மந்திரி. அதுவும் சுகாதார மந்திரி.

அஸ்ஸாம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள ஹேமானந்த பிஸ்வாஸ் என்பவர்தான் இப்படி திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.

இதிலே இவர்தான் அஸ்ஸாமின் நிதி மந்திரியும் கூடவாம்.
கல்வித்துறை அமைச்சரும் இவர்தானாம்  . .

இவரை முட்டாள் என்று மட்டும் சுருக்கி விட முடியுமா?

எவ்வளவு மோசமான சிந்தனை உள்ள மனிதனாக இருந்திட வேண்டும்!

மோடியின் கட்சியில்தான் உலகில் உள்ள எல்லா அறிவாளிகளும் குவிந்து கிடக்கிறார்கள் போல!

அஸ்ஸாம் மாநிலத்து நோயாளிகள் மற்றும் மாணவர்கள் நிலை பற்றி நினைத்தால்தான் மிகவும் கவலையாக உள்ளது. 

No comments:

Post a Comment