Thursday, June 14, 2012

இப்போதாவது அறிவு வந்ததா?





நாட்டை கவனியுங்கள்,
நாட்டு மக்களைக் கவனியுங்கள்,
இந்தியா ஒரு சுதந்திர நாடு,
அமெரிக்கப் பேரரசிற்கு
கப்பம் கட்டும் அடிமை நாடல்ல
என்றுரைத்த நல்லவரை,
என்னை அடிமைச் சங்கிலியால்
பிணைத்துள்ளார்கள் என்று
அபாண்டமாக பேசிய
தன்மானச் சிங்கமே,
மன்மோகன் சிங்கமே,
உயிர்த்தோழியாய் நீ கருதியவள்,
நித்தம் நித்தம் அளிக்கும்
உபத்திரவம் போதாதென்று
உன் உயிரையும், கூடவே
மானத்தையும் பறிக்கிறாள்,
ஆடைக்குள் புகுந்த
ஓணானாய் அவதியும்
அளிக்கிறாள்,
சொல்லவும் முடியாமல்,
மெள்ளவும் முடியாமல்,
மௌன சாமியார் வேடத்தை
கலைக்கவும் முடியாமல்
நீ தவிக்கும் தவிப்பு,
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.
உப்பைத் தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டும்.
இடது பக்கம் செல்லாமல்
தடம் மாறி,
தறி கெட்டுப் போன உனக்கு
இந்த இழிவான தண்டனை
என்றென்றும் தேவைதான்.
இப்போதாவது
அறிவு வந்தால் சரி

No comments:

Post a Comment