Tuesday, July 23, 2024

காவடி யாத்திரையில் கலவரத்துக்கு விதையா?

 



வட இந்தியாவில் கான்வர் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் காவடி போலத்தான் அதுவும்.

கங்கை நதி நீரை முக்கியமான தளங்களிலிருந்து காவடியில் உள்ள பானைகளில் சேகரித்து அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடக்கும் இந்த யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில்  முதலாளிகளின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று மொட்டைச் சாமியார் உத்தரவு போட்டுள்ளார்.

என்ன காரணம்?

இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர்கள் வைக்கிறார்களாம். அப்படி இருக்கிற இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டு யாத்திரை செல்பவர்களின் புனிதம் கெட்டு விடுமாம். இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க நினைக்கும் சில்லறை புத்தி இது.

இது மட்டுமா நோக்கமாக இருக்கும்?

மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியை சட்டப்பேரவை தேர்தலில் சரி செய்ய இந்துக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி விடும் ஆபத்தான சதி இது.

இன்னும் கூட ஒரு காரணம் இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

உணர்வுகளை தூண்டி விடுவது கலவரத்தை உருவாக்கவே! முசாபர்நகர் கலவரத்தை நடத்தித்தான் மொட்டைச்சாமியார் ஆட்சிக்கு வந்தார். இப்போது இன்னொரு கலவரம் அந்த கிரிமினல் சாமியாருக்கு தேவைப்படுகிறது. கடைகளில் பெயர்ப்பலகைகளில் இஸ்லாமியர்களின் பெயர் இருந்தால் அவர்களை தாக்குவது சுலபமாக இருக்கும் என்பதுவும் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

உத்திரப்பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. . .

 பிகு: அயோக்கியத்தனமான உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது ஒரு நல்ல செய்தி

No comments:

Post a Comment