Friday, July 19, 2024

மாட்டுக் குண்டர்களும் மோடி போலீஸும்

 


எருமை மாடுகளை வியாபாரத்திற்காக கொண்டு சென்ற மூன்று மாட்டு வியாபாரிகளை மோடியின் மாட்டுக் குண்டர்கள் அடித்து கொன்று விட்டனர். 

இது நடந்தது கடந்த மாதத்தில்.

நடந்தது பாஜக ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில் . .

வாகனத்தில் சென்ற வியாபாரிகளை மோடியின் மாட்டுக்குண்டர்கள் வழி மறித்து அடித்தார்கள் என்பது இறந்து போனவரில் ஒருவர் மரண வாக்குமூலமாக தன் நண்பருக்கு தொலைபேசியில் சொன்னது.

ஆனால் மோடியின் போலீஸோ, மோடியின் மாட்டுக் குண்டர்களை பாதுகாக்க கதையை மாற்றி விட்டது.

மாட்டுக்குண்டர்கள் ஒரு பாலத்தின் மீது துரத்திய போது வியாபாரிகளே  லாரியிலிருந்து குதித்து செத்துப் போனார்கள். அவர்கள் அடிக்கப்படவெல்லாம் இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லி விட்டார்.

அவங்க லாரியிலிருந்து எப்படி குதிச்சாங்க? அவங்க மேல இருந்த காயம் எப்படி வந்தது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரால் இயலவில்லை.

எப்படி முடியும்?

மாட்டுக்குண்டர்களை பாதுகாக்க மக்களை மடையர்களாக கருதுகிறோம் என்று அவரால் எப்படி சொல்ல முடியும்!

No comments:

Post a Comment