Wednesday, July 17, 2024

பக்தர்களை சோதிக்கலாமா அயோத்தி ராமா?

 


தேனியில் நூறு பேர், திண்டுக்கல்லில் 12 பேர் என 112 பேர் அயோத்திக்கு செல்வதென்று முடிவு செய்து ஒரு ட்ராவல் ஏஜெண்டை அணுகி உள்ளனர்.

அந்தாளும் 30,000 வாங்கிக் கொண்டு எல்லோருக்கும் விமான டிக்கெட்டை கொடுத்துள்ளான்.

அந்த டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு மதுரை விமான நிலையத்துக்குச் சென்றால் அங்கே வாசலிலேயே அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

காரணம் ?

அவை போலி டிக்கெட் . . .

அந்த ட்ராவல் ஏஜெண்டோ அந்த டிக்கெட்டுக்களை வேறு ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்ததாக சொல்லியுள்ளான். தன் சொந்தக்காசை போட்டாவது மாதக் கடைசியில் அனுப்புவதாக சொல்லியுள்ளதால் யாரும் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.

இன்னும் கொஞ்ச நாள் போனால்தான் தெரியும்.

இறுதி ஏமாற்றம் பக்தர்களுக்கா இல்லை ட்ராவல் ஏஜெண்டிற்கா என்று . . .

அநேகமா அந்த ட்ராவல் ஏஜெண்ட் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ராம பக்தியை வைத்து ஓட்டு வாங்கப்பார்த்த மோடிக்கு அயோத்தியில் ஓட்டு கிடைக்கவில்லை. 

அது போல தன்னுடைய பெயரைச் சொல்லி மோசடி செய்த பேர்வழிகளை அயோத்தி ராமர் தண்டிக்கிறாரா என்று பார்ப்போம் . . .

No comments:

Post a Comment