Wednesday, July 24, 2024

சங்கிகள் இல்லை, அமைதியாய் கடந்த யாத்திரை

 


ஹரியானாவில் பிரிஜ் மண்டல் யாத்திரை என்ற பக்தர்களின் யாத்திரை கடந்தாண்டு நடைபெற்ற போது "நூ" என்ற ஊரில் கலவரம் வெடித்து எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது எழுதிய ஹரியானா கலவர அரசியல் என்ற பதிவை இணைப்பின் மூலமாக படியுங்கள்

அதே யாத்திரை இந்த வருடம் "நூ" வைக் கடந்தது. அப்போது இஸ்லாமிய மக்கள், பக்தர்களை வரவேற்று குளிர் நீர் கொடுத்து ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர்.

எங்கள் கிராமத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை பல்லாண்டுகளாக கட்டுக்கோப்பாக உள்ளது. வெளியாட்களினால் கடந்த ஆண்டு கலவரம் வெடித்து எங்கள் ஊருக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்துக்களும் முஸ்லீம்களும் பேசி இந்த வருடம் வரவேற்பு கொடுப்பது என்றும் எந்த வெளியாளையும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தோம் என்று கிராமத்தினர் மகிழ்ச்சியோடு சொல்கின்றனர்.

சங்கிகளை அகற்றினால் அமைதி நிச்சயம் என்று நிரூபித்த "நூ" மக்களுக்கு பாராட்டுக்கள் . . .


No comments:

Post a Comment