Tuesday, July 30, 2024

மந்திரி பேச்சையாவது கேளுங்கம்மா . . .

 


ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி யை நீக்க வேண்டும்,  ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு மீண்டும் வரி விலக்கு தர வேண்டும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக ஒன்றிணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் நாடெங்கிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருகிறோம்.

பாஜக மந்திரி நிதின் கட்காரியை எங்கள் நாக்பூர் கோட்டத் தோழர்கள் சந்தித்துள்ளனர். அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.





ஆணவம் நிறைந்த நிர்மலா அம்மையாரே, நல்லவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருக்கும் நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் கட்சி மந்திரி சொல்வதையாவது கேட்டு நடக்கவும்.

No comments:

Post a Comment