Tuesday, September 26, 2023

தலைநகரத்து தறுதலைகள்

 


தில்லியைச் சேர்ந்த 7 பாஜக எம்பிகளால் நாட்டிற்கே அவமானம்


1. பர்வேஷ் வர்மா : தொடர் வெறுப்புப் பேச்சுக் குற்றவாளியான இவர் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால் தற்போது வெறுப்பைப் பரப்பியதற்காக வழக்குகளை எதிர்கொள்கிறார். 


2. கவுதம் கம்பீர் : மோசடி வழக்கில் தொடர்புடையவர். கொரோனா மருந்தை  பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். சமீபத்தில் ஒரு சர்வதேச போட்டியின் போது ஆபாசமான சைகை செய்தார். அவரது தொகுதியில் அரிதாகவே காணப்படுவார். அடிக்கடி கிரிக்கெட் அல்லது டிவியில் சர்ச்சை கருத்து தெரிவிப்பதைக் காணலாம்.   

 

 
3. மனோஜ் திவாரி : விதிகளை மீறி விமான போக்குவரத்து கட்டுப்பாடுப் பகுதிக்குள்நு(ATC) ழைந்ததற்காக வழக்குப்பதிவுக்கு உள்ளானவர். மேலும் பல முட்டாள்தனமான அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.  

 

 
4. ஹர்ஷ் வர்தன் : கொரோனா சமயத்தில் சுகாதார அமைச்சராக தோல்வி யுற்றார். ஒன்றிய  அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அறிவியலற்ற மருத்துவத்தை ஊக்குவித்ததற்காக இந்திய மருத்துவ சங்கத்தால் (ஐஎம்ஏ) கடுமையாக கண்டிக்கப்பட்டவர். 

 

 5. ஹன்ஸ் ராஜ் : ஏமாற்றுதல், போலி வழக்குகளில் தொடர்புடையவர்.பொய்யான பிரமாணப் பத்திரத்திற்காக தில்லி உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்.  

 

 
 6. மீனாட்சி லேகி : வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயி களை “குண்டர்கள்” என்று முத்திரை குத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர். எதிர்க் கட்சி எம்.பி.க்களை அமலாக்கத்துறை வழக்குகள் மூலம் தண்டிப்போம் என நாடாளுமன்றத்திலேயே மிரட்டியவர்.  

 

 7. ரமேஷ் பிதுரி : தொடர் வகுப்புவாத வெறியாட்டப் பேர்வழி. கட்டுக்கடங்காத நடத்தையின் வரலாற்றைக் கொண்ட வெறுப்புணர்ச்சியாளர். எப்போதும் இழிபேச்சு பேசுபவர், நமது ஜனநாயகத்திற்கு அவமானம்.  

 

மேற்குறிப்பிட்ட 7 எம்.பி.க்களால் தேசத்திற்கு அவமானம்.

நன்றி - தீக்கதிர்  25.09.2023

பிகு: முகப்பில் உள்ள தலைப்பு மட்டும் என்னுடையது. 

 

 

No comments:

Post a Comment