Sunday, September 3, 2023

பயங்கரமாய் கதறுகிறார்கள்

 



நேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய "சனாதன ஒழிப்பு மாநாடு" சங்கிகளின் வயிற்றை கலக்கி விட்டது.

சனாதன தர்மம் என்ற பெயரில் மனு தர்மம் சொல்லும் ஜாதிய பிரிவினைகளை, பிற்போக்குச் சிந்தனைகளை பாதுகாக்க நினைப்பவர்கள் அஞ்சுவது இயல்பானதுதான்.

இந்துத்துவா சிந்தனையின் ஆணிவேராக இருப்பது சனாதனம் என்பதால்தான் அதை ஒழித்தால் இந்துத்துவா சக்திகளின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும் என்பதால்தான் இந்த அச்சம்.

இம்மாநாட்டை ஏதோ இந்துக்களுக்கு எதிரானதாக திருப்பி விட முயல்வதுதான் வழக்கமான சங்கி அயோக்கியத்தனம்.

நேற்று வேலூரில் எங்கள் சங்கத்தின் சார்பில் ஒரு தொழிற்சங்க பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம், இந்த கதறல்களை பார்க்கும்போதுதான் ஒரு முக்கியமான நிகழ்வை தவற விட்டு விட்ட்ப்ம் என்ற ஆதங்கம் உருவானது.

ஆமாம். அமித்ஷா வேற கண்டனம் தெரிவிச்சிருக்காராம். ஆட்டுத்தாடி ரெவி இன்னும் எதுவும் சொல்லலியா? 




















No comments:

Post a Comment