Wednesday, September 13, 2023

போலீசுக்கே சோதனையா?

 


மற்றவர்களின் இணைய தளத்தை யாராவது கடத்தினால் அதாங்க HACK செய்தால்  காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவை நாடுவார்கள்.

அந்த காவல்துறையின் இணைய தளத்தையே HACK செய்து முடக்கினால்?

ஆம். தமிழ்நாட்டு காவல்துறையின் இணைய தளத்தை தென் கொரிய HACKERகள் முடக்கியிருக்கின்றனர். என்னென்ன பிரச்சினைகள் வருமோ? அதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

ஆனால் ஒன்று இந்த செய்தியை படிக்கையில் 

காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

என்ற தங்கப்பதக்கம், சோதனை மேல் சோதனை பாடலுக்கு நடுவே வரும் வரிகள் நினைவுக்கு வந்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment