Wednesday, September 6, 2023

கிருஷ்ணர், பிள்ளையார் - பக்தியும் அரசியலும்

 


இன்று காலையிலிருந்தே அருகாமையிலிருந்த கோயிலில் இருந்து பாடல்கள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணதாசன் - எம்.எஸ்.வி வழங்கிய கிருஷ்ண கானம் ஆல்பத்தின் பாடல்கள் பல முறை ஒலித்தது. எஸ்.பி.பி யின் இளமையான குரலில் "ஆயர்பாடி மாளிகையில்" டி.எம்.எஸ் ஸின் கம்பீரமான "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" எம்.எஸ்.வி யின் உருக்கமான "அமர ஜீவிதம்" ஆகிய பாடல்களை இப்போது கூட ரசிக்க முடிந்தது. ஒலித்த மற்ற பாடல்கள் கூட திரையில் வந்த கிருஷ்ணன் பாடல்களே! 

இறை நம்பிக்கை இல்லையெனினும் இசை ஈர்த்தது.

ஆனால் அடுத்த வாரம் ????

வருகிறது பிள்ளையார் சதுர்த்தியும் சங்கிகளின் ஏற்பாட்டில் பிள்ளையார் சிலைகளும்.

அங்கே குத்துப்பாடல்கள் தவிர வேறெதுவும் ஒலித்ததில்லை என்பதுதான் இருபது வருட அனுபவம். ஒரு இரண்டு ஆண்டுகள் மட்டும் கொரோனாவால் பிள்ளையாரும் இந்த இம்சையிலிருந்து தப்பித்தார்.

ஏன் இந்த வித்தியாசம்?

எளிதான காரணம்தான்.

கிருஷ்ண ஜெயந்தி பக்தியியால் கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார் சதுர்த்தி சிலைகளின் பின்னே இருப்பது அரசியல், 
மத வெறி அரசியல், ஆதிக்க அரசியல், 

No comments:

Post a Comment