Sunday, December 25, 2022

காவிக்கு களங்கம் எதனாலே?

 


 
காவியுடை அணிந்துதான் . . .
 
ஆலய வாசல்கள் முன்னே
பிச்சையெடுப்பது
காவியுடை அணிந்துதான்.
 
காசியில் கஞ்சா பிடிப்பது
காவியுடை அணிந்துதான். .
 
பாலியல் பலாத்காரம் செய்த
பாவிகள் சிலருக்கு
பாதுகாப்புக் கவசம்
 காவியுடைகள்தான்.
 
மிருகக் கொழுப்பை ஆயுர்வேத மருந்தென்று
ஏமாற்றி விற்பவன் அணிவதும் காவியுடைதான்.
 
அரசு நிலங்களை ஆக்கிரமித்து
கோயில் கட்டி கல்லா கட்டுபவர்
அணிவது காவியுடைதான்.
 
ஊழல்களை அம்பலப்படுத்தியவரை
வெட்டிச்சாய்க்க கொலையாளிகளை
அனுப்பியவர் அணிந்திருந்ததும்
காவியுடைதான்.
 
எல்லா குற்றங்களும் செய்து
தனி நாடு கண்டவர் பறந்ததும்
காவியுடையில்தான்.
 
காவிக்கு களங்கம் இதனாலா?
கால் நிமிட நடனத்தாலா

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete