Monday, January 13, 2020

தமிழ்த்தாய் வாழ்த்து மறந்தே போச்சு


எப்போதோ வந்த காணொளி. நேற்றுதான் பார்த்தேன். பார்க்காமலேயே இருந்திருக்கலாம். 

தில்லானா மோகனாம்பாளில் மனோரமா நாதஸ்வரம் வாசிக்க ஒரு கட்டத்தில் "ஜில்லு போதும், எனக்கு நாதஸ்வரமே மறந்துடும் போல இருக்கு' என்று சிவாஜி சொல்வார்.

அது மிகையான காட்சி அல்ல. இந்த காணொளியைப் பார்த்ததும் ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்தை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். சரியாகவே வரவில்லை. இரண்டு மூன்று முறைக்குப் பின்பே ஒழுங்காக வந்தது.

நல்ல வேளை

பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார்,
இதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்த கலைஞர்,
இசை வடிவம் அளித்த மெல்லிசை மன்னர்

ஆகியோர் இதனைக் கேட்க இப்போது உயிரோடு இல்லை.




No comments:

Post a Comment