Sunday, January 12, 2020

எடப்பாடியின் தவறல்ல . . .



சென்னை புத்தக விழாவை துவக்கி வைத்து எடப்பாடி ஆற்றிய உரை வீடியோ மீமாக உலாவிக் கொண்டிருக்கிறது. அது கீழே உள்ளது.


இதிலே எடப்பாடியின் தவறு எதுவும் இல்லை.

அவருடைய வாசிப்பு அறிவு, இலக்கிய ஞானம் எல்லாம் எவ்வளவு என்பதை அவர் படித்த "சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்" நூலிலேயே தெரிந்து விட்டது. 

அதற்கு பின்பும் அவரை புத்தக விழாவிற்கு அழைத்து வந்து வாசிப்பு பற்றியெல்லாம் பேசச் சொன்னால் என்ன நியாயம்?

எப்படி மண்டியிடுவது?
எப்படி தவழ்ந்து கொண்டே சென்று காலில் விழுவது?
எப்படி டயரை கும்பிடுவது?

போன்ற அவரது கடந்த கால செயல்பாடுகள் பற்றியோ

அல்லது

எப்படி கோடிக்கணக்கில் சம்பாதிப்பது?
ஆட்சியை எப்படி பாதுகாத்துக் கொள்வது? 

போன்ற அவருடைய துறைகளைப் பற்றி பேசச் சொல்லியிருந்தால் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த வாய்ப்பை கொடுக்காதது யார் தவறு?


2 comments:

  1. இதுக்கு நேரடியாவே கலாய்ச்சிருக்கலாம்

    ReplyDelete